அருள்மிகு சர்ப்பபுரீசுவரர், நாகநாதசுவாமிகோவில், திருப்பாதாளீச்சரம், பாமணி, மன்னார்குடி.

ராகுகேது தோஷம், நாகதோஷம்,காலசர்ப்பதோஷம்,

சனிதோஷ நிவர்த்திஸ்தலம்

சிவஸ்தலம்பெயர்: திருப்பாதாளீச்சரம் (தற்போதுபாமணிஎன்றுவழங்கப்படுகிறது)

இறைவன்பெயர்: நாகநாதசுவாமி, சர்ப்பபுரீசுவரர்

இறைவிபெயர்: அமிர்தநாயகி

பதிகம்: திருஞானசம்பந்தர் – 1

எப்படிப்போவது:  மன்னார்குடிக்குவடக்கேநகரஎல்லையில் 3.5 கி.மீ. Naganathaswamy5தொலைவில்இத்தலம்அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்கு செல்லும் சாலையில் சென்று,  பாமணியை அடைந்து, அங்குள்ள உரத்தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில்இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.

ஆலயமுகவரி:
அருள்மிகு சர்ப்பபுரீசுவரர் திருக்கோயில்
பாமணி, பாமணிஅஞ்சல், (வழி) மன்னார்குடி,மன்னார்குடிவட்டம்
திருவாரூர்மாவட்டம் – PIN – 614014

இவ்வாலயம்தினந்தோறும்காலை 9 மணிமுதல்பகல் 12 மணிவரையிலும், மாலை 5-30 மணிமுதல்இரவு 8 மணிவரையிலும்திறந்திருக்கும்.

தலவரலாறு: சுகலமுனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர்வளர்த்த காமதேனு தரும் பாலைக்கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்துவந்தார். ஒருசமயம் அவர் வளர்த்த காமதேனு பால்சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக்கண்டு, முனிவர் தமக்கு பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தின் மீது முட்டி ஓடி வடக்குவீதியில் உள்ள பசுபதிதீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.

காமதேனு முட்டியபோது சுயம்புலிங்கமூலத்திருமேனி முப்பிரிவாகப்பிளந்தது. சுயம்புலிங்கமாதலால் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. முப்பிரிவாக பிளந்த லிங்கம் செப்புத்தகட்டால் ஒன்றாக பொருத்தப்பட்டு விளங்குகிறது.

பாதாளத்திலிருந்துஆதிசேஷன்வெளிப்பட்டு, தனஞ்சயமுனிவராய் இத்தல இறைவனை வழிபட்டார். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது.  பாம்பணி, சர்ப்பபுரம் என்பன  இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சயமுனிவர் உருவமுள்ளது. நாகலிங்கப்பிரதிஷ்டையும் காணப்படுகிறது.

கோவில்அமைப்பு: முகப்புவாயிலைக்கடந்து உள்புகுந்தால் வலப்பால் அம்பாள்சந்நிதி உள்ளது.  உட்கோபுரவாயிலை கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலப்பால் நடராஜசபை உள்ளது. மனிதமுகம்,  பாம்புஉடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.  அனந்தன்,  வாசுகி,  தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்டநாகங்களுக்கும், ராகு,கேது விற்கும் தலைவன் ஆதிசேஷன். வேறுஎங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதகரீதியாக நாகதோஷம், ராகுகேது தோஷம், காலசர்ப்பதோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பதுநம்பிக்கை.

தனிசிறப்பு: மண்ணால் அமைக்கப்பட்ட லிங்கங்களுக்கு பிற கோயில்களில் அபிஷேகம் செய்யமாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்று மண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம்உண்டு என்பது தனிசிறப்பாகும்.

இங்கு பைரவரும், சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்திஸ்தலமாகவும் உள்ளது.

இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்மதட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள்கிடைக்கும். ஒரு முறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவாரபாலகர்கள் தடுத்தனர்.  கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம்நீங்க பாமணி நாகநாதரையும், சிம்மதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப்பெற்றனர்.

வழிபாடு:

சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்குவந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்திதலமாக விளங்குகிறது.

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

astrologer_thetiyur_mahadevDivine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304