சிவஸ்தலம்பெயர் திருநறையூர் (சித்தீச்சரம்)
இறைவன்பெயர் சித்தநாதேஸ்வரர்
இறைவிபெயர் சௌந்தரநாயகி, அழகாம்பிகை

பதிகம் திருஞானசம்பந்தர் – 3 சுந்தரர் – 1

கோவில்தலவரலாறு: இத்தலத்துஊரின்பெயர்திருநறையூர்.

ஆலயத்தின்பெயர்: சித்தீச்சரம்.

t7மேதாவிமகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கிவந்தார். மஹாவிஷ்ணுவை இந்தமகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர்பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப்பிறக்க அருள்செய்யவேண்டும் என்று சிவபெருமானை வேண்டிதவம் இருந்தார்.

சிவன் திருமாலிடம் மேதாவிமகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக்குளத்தில் ஒரு மலர்ந்த தாமரைமலரில் மேதாவிமகரிஷிமுன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப்பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம்செய்துகொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

thirunarayur1aகோரக்கசித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன்அவருக்குஅருள்புரிய, கோரக்கசித்தர் சித்தர் தனது நோய் நீங்கப்பெற்றார். கோரக்கசித்தர் சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம்சித்தீச்சரம்என்றும்வழங்குகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர்தலமும், புகுந்தவீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.

சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப்பழமையானது. நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றிவந்தனர் .தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்று விட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரதமகரிஷியிடமிருந்தும், சூரியபகவானிடமிருந்தும் ஆலோசனைப்பெற்று, அதன் படி அசுரனின் கவசகுண்டலங்களை யாசித்துப்பெற்றுக்கொண்டு, அசுரனைபோர்புரிந்து கொன்றனர்.

t8அந்தபாவத்தைப் போக்கிக்கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவ நிஷ்டையில்ஆழ்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்க வில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும் படி சபித்துவிட்டார். நாரையாகப்பிறந்த நாராயணர் காவிரி வடகரைத்தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றார்.  நரனோ, நரையான் என்ற பறவையாகப்பிறந்து, இத்தலசித்தீச்சரப்பெருமானை வழிபட்டு தன் பழையவடிவம் பெற்றார். நர,நாராயணர் சிவவழிபாடு செய்யும் புடைப்புச்சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக்காணலாம்.

மூலவர்சித்தநாதேஸ்வரர்

கோவில்அமைப்பு: சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்குநோக்கி காட்சிதருகிறது. கோபுரவாயில்வழியே உள்ளேநுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்கஉருவில் மேற்குதிசைநோக்கி காட்சிதருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச்சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒருதட்சிணாமூர்த்தியும், மேற்குதிசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்குதிசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது. ரிஷபத்தின் தலைமீது வலதுகையை ஊன்றியபடி காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்கவேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலைஅழகுடன் காணப்படுகிறது.

பிரகாரத்தில் ஒரேசந்நிதிக்குள் மூன்றுசண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும். மேதாவிமகரிஷி இத்தலத்தில் இறைவனைவழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம்முடித்த தலம் இதுவாகும். மேதாவிமகரிஷிக்கு இத்தலத்தில் தனிசந்நிதி உள்ளது. இறைவி சௌந்தரநாயகி அம்பாள் தனிசந்நிதியில் காட்சிதருகிறாள். குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தம்: பிரமதீர்த்தம். இதுகோயிலுக்குவடக்கேஉள்ளது. மாசிமாதத்தில்மூன்றுநாட்களும், ஆவணிமாதத்தில் மூன்றுநாட்களும் சூரியகிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.

எப்படிப்போவது கும்பகோணத்தில்இருந்துநாச்சியார்கோவில்செல்லும்வழியில் 10 கி.மி. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிகஅருகில் ஆலயம்உள்ளது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்தநாதேஸ்வரர் ஆலயத்தில்இருந்து 1 கி.மி. தூரத்தில்இருக்கிறது.

ஆலயமுகவரி: அருள்மிகுசித்தநாதேஸ்வரர்திருக்கோயில்
திருநறையூர், நாச்சியார்கோவில்அஞ்சல், கும்பகோணம்வட்டம்
தஞ்சாவூர்மாவட்டம் – PIN – 612102

நடைதிறந்திருக்கும் நேரம்:

இவ்வாலயம்தினந்தோறும்காலை 6 மணிமுதல்பகல் 12 மணிவரையிலும், மாலை 5 மணிமுதல்இரவு 8-30 மணிவரையிலும்திறந்திருக்கும்

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று சிவனருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
astrologer_thetiyur_mahadev

Divine Astrologer
தேதியூர் V.மஹாதேவன்
Swayamvaralaya,
vedicpoojahomam.com
98417 89483, 8825609304